திருக்கோயில் நூல்கள்:
திருக்கோயில்களின் தலவரலாறுகள், தலபுராணங்கள், ஆகம நூல்களை ஆவணப்படுத்துதல், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள், அரிய சமய நூல்களை மறுபதிப்பு செய்து நூலாக்கம் செய்தல், கிராமப்புறக் கோயில்களின் வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகளை ஆவணப்படுத்துதல். திருக்கோயில்களில் கண்டறியப்படும் தொன்மையான ஓலைச்சுவடிகள் மற்றும் செப்பேடுகளைத் திரட்டிப் பாதுகாத்தல் மற்றும் மின்நூல் வடிவில் மாற்றம் செய்தல். திருக்கோயில் கட்டடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை போன்ற செந்தமிழ் இலக்கியங்களை நூலாக்கம் செய்வதுடன் திருக்கோயில் விற்பனை நிலையங்கள் மூலம் ஆன்மிக அன்பர்களுக்கு எளிதில் கிடைக்கச்செய்தல்.
